போதையில் தகராறு செய்ததை கண்டித்ததால் சரமாரி தாக்கப்பட்ட தந்தை பரிதாப சாவு; கொலை வழக்கில் மகன் கைது

அம்பத்தூர்: பாடி, அவ்வை நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (80). இவரது மனைவி ராணி (65). இவர்களது  மகன் சங்கர் (34). பெயின்டரான சங்கர், சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்ததால், இவரது மனைவி விஜயலட்சுமி (30), கோபித்துக்கொண்டு விருத்தாசலத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி இரவு சங்கர் போதையில் வீட்டுக்கு வந்து, தாய் ராணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை தந்தை  சுந்தரமூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சங்கர் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில், சுந்தரமூர்த்திதலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இதுகுறித்து கொரட்டூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இதற்கிடையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு சுந்தரமூர்த்தி இறந்தார். இதையடுத்து, கொரட்டூர் போலீசார் கொலை வழக்காக மாற்றி சங்கரை கைது செய்தனர்….

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது