போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்

நாகர்கோவில், ஜூலை 7: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட பயிற்சிகளின் வாயிலாக போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தர் பணி நியமன ஆணை வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி II/II ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று 9 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் தர், பணிநியமன ஆணையும், ஊக்கப்பரிசும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இம்மானுவேல், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி