போடி பகுதியில் நெல் சாகுபடியில் களையெடுப்பு தீவிரம்

போடி :  போடியைச் சுற்றியுள்ள குரங்கணி, முந்தல், மேலப்பரவு, கூலிங்காற்று பரவு, பாண்டி முனி கருப்பசாமி கோயில் புலம், சன்னாசிபுரம் செட், அணைக்கரைப்பட்டி, துரைராஜபுரம், தோப்புபட்டி, பொட்டல்களம், மீனாட்சிபுரம், விசுவாசபுரம், பத்ரகாளிபுரம், காமராஜபுரம், கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் கொட்டகுடி ஆறு பாசனம் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கரில் ஒருபோக நெல் சாகுபடி விவசாயம் நடந்து வருகிறது. மேலும் புதுக்குளம், பங்காருசாமி குளம், சங்கரப்பநாயக்கன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய், செட்டிகுளம் ஆகிய குளங்களில் கொட்டகுடி ஆற்று நீரை தேக்கி நெல் சாகுபடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும், நிலத்தடி நீர் உயர்வால் கிணற்று பாசனம் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, சோளம், காய்கறிகள் என பலதரப்பட்ட விவசாயம் நடந்து வருகிறது. இதனிடையே நவம்பர் முதல்வர் நெல் நடவுப் பணி நிறைந்து 45 நாட்கள் வளர்ந்துள்ள நெற்பயிரில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பயிர் பிப்ரவரி மாதத்தில் அறுவடைக்கு வரும் என எதிர்ப்பார்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்….

Related posts

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்