போடி அருகே போதை வாலிபர் கைது

போடி, டிச. 28: போடி ரெட்டைக்வாய்க்கால் அருகே உள்ள பகுதியில் நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் மதுபோதையில் ஆபாசமாக பேசியபடி நின்று கொண்டிருந்தார். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளார். இது குறித்து போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்ஐ திருமுருகன் மற்றும் போலீசார், வாலிபரை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

ஆனால், வாலிபர் அங்கிருந்து போக மறுத்ததுடன், தொடர்ந்து அவதூறாக பேசியதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினார். இதனையடுத்து அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் போடி புதூரை சேர்ந்த முருகன் மகன் பழனிவேல் (24) என தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது ெசய்தனர்.

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்