போடியில் 3 பவுன் செயின் பறிப்பு

 

போடி, ஜூலை 5:சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பேச்சி யம்மன் கோயில் தெருவில் குடியிருப்பவர் முத்துசாமி. இவரது மனைவி பெருமாயி (57). இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக போடி தென்றல் நகரில் குடியிருக்கும் மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து நேற்று மகள் நடத்தும் துணி கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர்கள் இருவர் டூவீலரில் பின் தொடர் ந்தவர்கள் அவரது கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து பெருமாயி போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் எஸ்ஐ அசோக் செயின் பறிப்பில் ஈடுப்பட்டவர்களை தேடி வருகிறார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை