போடிமெட்டு அருகே விபத்தில் காங்., பிரமுகர் பலி

போடி, செப். 13: போடி திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் அன்புமணி (25). இவர் போடி வட்டார காங்கிரஸ் இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது டூவீலரில் போடிமெட்டு அருகிலுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பூப்பாறைக்கு சென்று விட்டு ஊர் திரும்பினார். தோண்டி மலை சாலையில் வந்தபோது எதிரே பஸ் மற்றும் லாரி வர, ஒதுங்கியபோது டூவீலர் தடுப்புச்சுவற்றை தாண்டி ஏலத்தோட்டத்திற்குள் விழுந்தது. இதில் அன்புமணி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்