போச்சம்பள்ளியில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி

போச்சம்பள்ளி, அக்.21: போச்சம்பள்ளி அருகே உள்ள திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் சூரியா (27). இவர் நேற்று தனது நண்பரான முத்து என்பவரது காரை எடுத்து கொண்டு, போச்சம்பள்ளி சென்றார். பின்னர், அங்கிருந்து திப்பனூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். புளியம்பட்டி ஏரிக்கரையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சூர்யா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி