போக்குவரத்து துறையில் காலி பணியிடம் நிரப்ப கோரிக்கை

 

பரமக்குடி, ஜூன் 21: அரசு போக்குவரத்து கழகத்தில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் ஒய்வு பெற்ற ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்த அனைத்து பணிமனைகளிலும் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு காரைக்குடி மண்டல ஏஐடியுசி தலைவர் செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒய்வு பெற்ற தொழிலாளர்களை பணியமர்த்துவதன் மூலம், இவர்களை வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க அனுப்பும் வாய்புள்ளது. இதனால்,பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். எனவே, காலிப் பணியிடங்களை உடனே நிறப்பவேண்டும். ஒய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்துவதால் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை