பொருளாதார குற்ற வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை: எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பொருளாதார குற்ற வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கண்காணிப்பாளராக பணிபுரிந்த சிவச்செல்வம் ஓய்வு பெற்றபின் நிதிநிறுவனம் தொடங்கி 10 சதவீதம் வட்டி தருவதாக பணமோசடியில் ஈடுபட்டார். 10 சதவீதம் வட்டி தருவதாக ரூ.66 லட்சம் வசூலித்து பணமோசடி செய்ததாக 20 பேர் கொடுத்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2012ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி