பொன்.புதுப்பட்டி அரசு பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

 

பொன்னமராவதி,நவ.10: பொன்னமராவதியில் உள்ள பொன்.புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பொன்னமராவதியில் உள்ள பொன் புதுப்பட்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் சுகன்யா தலைமை வகித்தார்.

முகாமில் பகுதி சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி மருந்தாளுனர்கள் அசோகன், ராதிகா, செவிலியர்கள் ரேகா பிரவீனா ஆய்வக நுட்பனர் சங்கரேஸ்வரி, பல் மருத்துவ உதவியாளர் கவிதா மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் செய்திருந்தார்.

Related posts

நாளை சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்: மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுகோள்

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் கள ஆய்வு