பொன்னேரி அருகே மண் திருடிய லாரி சிறைபிடிப்பு

பொன்னேரி: மண் திருடுவதாக குற்றம்சாட்டி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணியாறு, லட்சுமிபுரம் தடுப்பணையில் இருந்து காட்டூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. வேளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏரியில் மண் திருடப்படுவதாகக்கூறி அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையோடு ஏரியில் இருந்து மண் திருடப்பட்டு அருகில் உள்ள செங்கல் சூளையில் பதுக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். ஏரியில் இருந்து மண் திருடுவதால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டினர். தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் காட்டூர் காவல்துறையினர் விரைந்து வந்தனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றனர். இதனால்  அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்