பொன்னானி-அம்மங்காவு கொளப்பள்ளி குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

பந்தலூர், செப். 15: பந்தலூர் அருகே பொன்னானியில் இருந்து அம்மன்காவு கொளப்பள்ளி செல்லும் சாலையில் தினமும் பள்ளி பேருந்துகள், ஆட்டோ ஜீப் என பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. விவசாயிகள் பலரும் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள், விளை பொருட்களையும் எடுத்து செல்கின்றனர். இந்த சாலை கடந்த 3 ஆண்டுக்கு முன் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் புதுப்பிக்கப்பட்டு தார் சாலை போடப்பட்டது.

அதிகளவு டிப்பர் லாரிகள் சுமைகள் ஏற்றி சென்று வந்ததால் சாலையின் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு உடைந்து குண்டு குழியுமாக மாறி வருகிறது. மேலும், சாலையில் மழைநீர் தேங்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே, ஆங்காங்கே உடைந்துள்ள சாலையை சீரமைக்க கூடலூர் ஊராட்சி ஒன்றிய சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்