பொன்னமராவதி அருகே மணப்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

 

பொன்னமராவதி,ஜன.20: பொன்னமராவதி அருகே மணப்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார;பில் அதன் கட்டுப்பட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளி, கல்லூரி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக பொன்னமரா அருகே தூத்தூர் ஊராட்சி மணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு டெங்கு காச நோய் மற்றும் நாய் கடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முகாமில் பள்ளி தலைமை ஆசிரியை மாரிமுத்து உதவி ஆசிரியைகள் சுஜா உமாதேவி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை