Saturday, June 29, 2024
Home » பொன்னமராவதி அருகே அரசு பேருந்து மோதி சாலை பணியாளர் பலி

பொன்னமராவதி அருகே அரசு பேருந்து மோதி சாலை பணியாளர் பலி

by Suresh

பொன்னமராவதி. பிப்.13: பொன்னமராவதி அருகே அரசு பேருந்து மோதி சாலை பணியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் வீரன் மகன் பழனி (57). சாலை பணியாளர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனி அவரது பைக்கில் கேசராபட்டி – உலகம்பட்டி வளைவு சாலையில் வட்டமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பழனி சென்ற பைக் மீது மோதியது.

இதில் பழனி பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. அதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. மேலும் தகவல் அறிந்து வந்த பொன்னமராவதி போலீசார் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அரசு பேருந்தை ஓட்டி வந்தவர் பொன்னமராவதி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த நிலையில் விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

You may also like

Leave a Comment

14 − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi