பொன்னமராவதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்க வேண்டும்

 

பொன்னமராவதி,ஜூன் 10: பொன்னமராவதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதியை விட சிறிய ஊர்களில் கூட வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் 42 கிராம ஊராச்சிகள் உள்ள இந்த பெரிய பகுதியில் இதுவரை வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படவில்லை.

இதனால் புதுக்கோட்டைக்கு சென்று வரவேண்டிய நிலையுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சென்று லைன்ஸ் வாங்க செல்வதில்லை.  பொன்னமராவதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைத்தால் இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும். எனவே இப்பகுதி வாகன ஓட்டிகள் நலன் கருதி வட்டார போக்குவரத்துக்கழகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்