Tuesday, September 17, 2024
Home » பொன்காளியம்மன் கோயில் திருவிழா நடத்த முடிவு

பொன்காளியம்மன் கோயில் திருவிழா நடத்த முடிவு

by Karthik Yash

திருச்செங்கோடு, ஜூலை 26: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம் முஞ்சனூர் கிராமம் பொன்காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக, தற்போதைய அறங்காவலர்களாக உள்ள பழனிச்சாமி, விவேகானந்தன், அலமேலு ஆகியோர் ஒரு தரப்பிலும், சேகர், மோகன், கணேசன், பரமேஸ்வரன், சேதுராமன் ஆகியோர் மற்றொரு தரப்பிலும் உள்ளனர்.
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, கடந்த 17.6.24ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவர்கள் தலைமையில், திருவிழா நடத்தப்படும் என முடிவானது. இந்நிலையில் பழனிச்சாமி, விவேகானந்தன், அலமேலு தரப்பினர், அறங்காவலர் குழு மற்றும் கோயில் செயல் அலுவலரை வைத்து திருவிழா நடத்தலாம் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்று வந்தனர்.

அதன்படி நேற்று இருதரப்புக்கும் இடையே, ஆர்டிஓ சுகந்தி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. டிஎஸ்பி இமயவரம்பன், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், அறநிலையத் துறை ஆய்வாளர் வடிவுக்கரசி, முஞ்சனூர் விஏஓ ஈஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர். சீனிவாசன், வெங்கடாசலம், வினோத், பழனிச்சாமி, நடராஜன் ஆகியோர் ஒரு தரப்பு சார்பிலும், சேகர், மோகன், கணேசன், பரமேஸ்வரன், சேதுராமன் ஆகியோர் மற்றொரு தரப்பு சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதில் நீதிமன்ற உத்தரவு படி அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் திருவிழாவை 9.8.24க்குள் நடத்திக் கொள்ளலாம் என ஆர்டிஓ உத்தரவிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட இருதரப்பினரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

You may also like

Leave a Comment

17 + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi