பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.7: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை(8ம் தேதி) 8 இடங்களில் பொது விநியோகத்திட்டம் சம்பந்தமாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை (8ம்தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 8 இடங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் கோதிகுட்லப்பள்ளி, ஊத்தங்கரை- வீரணகுப்பம், போச்சம்பள்ளி- தாமோதரஅள்ளி, பர்கூர்- தொகரப்பள்ளி கூட்ரோடு (புலிகுண்டா), சூளகிரி- உலகம், ஓசூர்- எலுவப்பள்ளி (பாகலூர்), தேன்கனிக்கோட்டை -அருளாலம் (சாலிவாரம்), அஞ்செட்டி -தாம்சனப்பள்ளி ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது. எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை