கோவை, அக். 7: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (கோவை மாவட்டம்) நூற்றாண்டு விழா கூட்டம் கோவை ஒஎம்சிஏ கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில், தமிழக அரசில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பெற்று வரும் தொகுப்பூதியத்தை ரத்து செய்து தமிழக அரசு காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.
அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கல்வி துறையில் உள்ளதை போல அரசு துறைகளிலும் பொது கலந்தாய்வு மூலம் பணி இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.