பொது இடத்தில் சண்டையிட்ட 3 பேர் கைது

 

விருதுநகர், ஜூலை 25: விருதுநகர் ஆத்துமேடு தரைப்பாலத்தில் சண்டையிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.விருதுநகரில் உள்ள ஆத்துமேடு பகுதியில் கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் 3 பேர் சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்களை மடக்கிய போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சண்டையிட்டது சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த வேதபோதகர்(26), ரஞ்சித்குமார்(25) மற்றும் அன்னை சிவகாமிபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து