Sunday, July 7, 2024
Home » பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 22.66 லட்சம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 22.66 லட்சம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

by kannappan

சென்னை: பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து கடந்த 11ம் தேதி முதல் 23ம் தேதி வரை 22.66 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களின் மீதும், கட்டுமான கழிவுகளை பொது இடங்களிலும்,  சாலைகளிலும் கொட்டுபவர்களின் மீதும் நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் குப்பைகளை எறிபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 11ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களிடம் இருந்து 11,53,600 அபராதமும், பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய  நபர்களிடம் இருந்து 11,12,400 அபராதமும் என மொத்தம் 22.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi