பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்: பெரம்பூர் வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் உறுதி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டி யிடுகிறார். இவர், தினமும் பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை மனுவாக பெற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட சர்மாநகர் பி.வி. காலனி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,“மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 2500 ஆக உயர்த்தி தரப்படும். பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். பேருந்தில் பயணம் செய்யும் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம் சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டித்தரப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை அனைத்தும் நிறைவேற்ற நட வடிக்கை எடுப்பேன்” என்றார்….

Related posts

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை