பொதுமக்கள் குறைதீர் மையங்கள்: இ.கருணாநிதி வாக்குறுதி

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி ேநற்று பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் இ.கருணாநிதி பேசுகையில், “பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை, பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தனித்தனியாக அலுவலகங்கள் அமைத்து சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து, அந்தக் குறைகள், கோரிக்கைகளை நானே நேரடியாக சென்று ஒரு கவுன்சிலர் போல் பணியாற்றி சரி செய்துள்ளேன்.இதனால் பொதுமக்கள் பயனடைந்தனர். இதேபோல் வரும் காலங்களிலும் அந்த மையங்கள் பொதுமக்களுக்காக தொடர்ந்து செயல்படும். அதன்மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் என்னிடம் தெரிவித்தவுடன் அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன். எனவே, சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரசாரத்தில் பம்மல் திமுக நகர செயலாளர் வே.கருணாநிதி உட்பட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்….

Related posts

இலங்கை அதிபருடன் வெளியுறவு அமைச்சர் சந்திப்பின்போது ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம், மீனவர் பிரச்னை தீர்வு குறித்து வலியுறுத்த வேண்டும்: ராமதாஸ் அறிவுறுத்தல்

சொல்லிட்டாங்க…

சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ்; பாமகவின் பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சனம் செய்யுங்கள்: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை