பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கினார் பிரணிதா

சென்னை: தமிழில் உதயன், சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்தவர், கன்னட நடிகை பிரணிதா. தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த மே 30ம் தேதி அவர் நிதின் ராஜூ என்ற தொழிலதிபரை காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது பெங்களூருவில் வசிக்கும் பிரணிதா, கொரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் சில மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவது உள்பட பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில், தனது அறக்கட்டளையில் பதிவு செய்துள்ள 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரணிதா கொரோனா தடுப்பூசிகளை தன் சொந்த செலவில் வழங்கியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முகாம் அமைத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி