பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு திமுக மாவட்ட செயலாளர் தேர்தலுடன் மாவட்ட அமைப்புகளுக்கும் தேர்தல்

சென்னை: திமுக மாவட்ட அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக 15வது பொதுத் தேர்தலில், பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர தேர்தல்கள் முடிவுற்றதை தொடர்ந்து, நடைபெற உள்ள மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில், மாவட்ட கழக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, மாவட்ட கழகத்திற்கென ஒரு அவைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், துணைச் செயலாளர்­கள் மூன்று பேர் (கட்டாயமாக ஒருவர் பொதுப்பிரிவினராகவும், ஒருவர் ஆதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்) ஆகிய அலுவலர்­களையும்; கட்சி நிர்வாக வசதிக்கேற்ப பிரிக்­கப்பட்ட தத்தமது மாவட்ட கழகத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் உண்டோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, அத்தனை தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும் அதை போலவே, மாவட்ட கழகத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் உண்டோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு தொகுதிக்கு 2 பொதுக்குழு உறுப்பினர்கள் வீதம், (மாவட்டத்தில் உள்ள பொதுக்குழுவில் கண்டிப்பாக ஒருவர் மகளிராக இருத்தல் வேண்டும்) மாவட்ட கழகப் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் தேர்தலுடன் மாவட்ட அமைப்புகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

சொல்லிட்டாங்க…

நாடாளுமன்றத்தில் மணிப்பூரின் 2வது எம்பியை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை: ஒன்றிய அரசு மீது காங். குற்றச்சாட்டு

இந்து மத கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: பாஜ மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு