சென்னை: பொதுக்குழு ஒப்புதல் என்பது சம்பிரதாயம்தான் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டு வருகிறார். பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் பதவிகள் எப்படி காலியாகும் என பன்னீர் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். இறந்தபோது என்ன ஆனது என விளக்கவில்லை. தலைவர்கள் உயிருடன் இல்லாத போதுதான் பதவி காலி என கருத முடியும் என பன்னீர் தரப்பு தெரிவித்தது….