சென்னை: பொங்கல் முடிந்து திரும்பும் பயணிகளுக்காக வரும் 17ம் தேதி முதல் 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக நாளை போகி பண்டிகையும், 15ம் தேதி மாட்டுப்பொங்கல், 16ம் தேதி காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனால் நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிப்பு, பணி, தொழில் நிமித்தமாக தங்கி இருப்போர், சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிறப்பு பஸ்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பணியாற்றும் ஊர்களுக்கு பயணிகள் திரும்ப வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், 2022ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து, கடந்த 20.12.2021 அன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்படி பொங்கல் இயக்கம் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், தற்பொழுது தமிழ்நாடு அரசு 16.1.2022 அன்று முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் மாறுதல் செய்து பொங்கலுக்கு பின்பு 16.1.2022 முதல் 18.1.2022 வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கம் 17.1.2022 முதல் 19.1.2022 வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 16.1.2022 அன்று முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப இரண்டு தினங்களில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.பஸ்கள் இயக்க விவரம்நாள் தினசரிபஸ் சிறப்புபஸ்17.1.22 2,100 5,65518.1.22 2,100 3,21419.1.22 2,100 1540மொத்தம் 16,709* பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியதுபோக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகைக்கான 16,768 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை (இன்று) முதல்தான் கூட்டம் அதிகரிக்கும். 12, 13ம் தேதிகளில் பயணிப்பதற்காக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்’ என்றார்.* முன்பதிவு கட்டணம் வாபஸ்தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16ம் தேதி பஸ்கள் இயங்கும் என்று நினைத்து பலர் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த நாள் ஞாயிற்று கிழமை என்பதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை பஸ்கள் இயங்காது. எனவே 16ம் தேதி அன்று முன்பதிவு செய்தவர்கள் செலுத்திய முன்பதிவு கட்டணத்தை திருப்பி அவர்களுக்கு இரண்டு நாட்களில் தரப்படும்….