சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடங்குகிறது. பயணிகள் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுள்ளது. ஐஆர்டிசி இணையதளம் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது