பொங்கல் தொகுப்பு விநியோகம் பொங்கலை முன்னிட்டு மஞ்சள் மார்கெட்டுக்கு 5 நாள் விடுமுறை

ஈரோடு, ஜன. 12: பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 5 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விற்பனைக்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளன. இங்கு வார வேலை நாள்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு நாளை (13ம் தேதி) முதல் வரும் 17ம் தேதி வரை 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. வரும் 18ம் தேதி முதல் வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடைபெறும்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை