பைக் விபத்தில் வாலிபர் பலி

 

திண்டிவனம், ஜூன் 26: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வேலியம்பாக்கம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ்(30). இவர் நேற்று உறவினர்களுடன் மயிலம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு பைக்கில் சென்றார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தில் சென்றபோது, சாலை ஓரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை