பைக் மோதி வாலிபர் பலி

அம்பத்தூர்: புழல் – தாம்பரம் புறவழிச்சாலை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 35 வயது நபர் ஒருவர் நேற்று முன்தினம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பைக்கை ஓட்டிவந்த கொடுங்கையூர் எம்ஆர் நகரை சேர்ந்த ராஜேந்திரன்(25). பேக்கரி ஊழியர் படுகாயமடைந்தார். தகவலின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த ராஜேந்திரனை மீட்டு போரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரிக்கின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை