பைக் மீது லாரி மோதி பெண் பலி

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே புத்தளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (43). இவரது மனைவி துளசி (40). நேற்று மாலை குமார், மனைவியுடன் காஞ்சிபுரம் இந்திரா நகருக்கு பைக்கில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். ஓரிக்கை பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த லாரி, பைக் பக்கவாட்டில் உரசியது. இதனால், நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். அதில் துளசியின் தலையில், லாரி ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசரிக்கின்றனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி