Friday, September 6, 2024
Home » பைக் மீது லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு: காதலன் கண்முன் பரிதாபம்

பைக் மீது லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு: காதலன் கண்முன் பரிதாபம்

by Ranjith

 

பூந்தமல்லி, ஜூலை 22: பூந்தமல்லி அருகே பைக் மீது லாரி மோதியதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். காயமடைந்த அவரது காதலன் சிகிச்சை பெற்று வருகிறார். அண்ணாநகரை சேர்ந்தவர் சண்முகம் (28), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் பணிபுரிந்து வந்து வந்தவர் நந்தினி (22), இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் பைக்கில், பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தனர்‌.

அப்போது, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் நந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து நந்தினி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த சண்முகத்தை அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சுரேஷ் (28), என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi