பைக் மீது கார் மோதி சாலைப் பணியாளர் பலி

 

எட்டயபுரம், ஆக 19: எட்டயபுரம் அருகேயுள்ள வெம்பூரை சேர்ந்த மாரிச்சாமியின் மகன் குருசாமி (50). சாலைப்பணியாளராக பணியாற்றி வந்த இவர், நேற்று காலை தனது பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப வெம்பூரில் இருந்து தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அதேவேளையில் உடன்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார், குருசாமியின் பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குருசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த மாசார்பட்டி போலீசார், குருசாமியின் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்த போலீசார், காரை ஓட்டிச்சென்ற சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி லட்சுமி சங்கர் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது