பைக் பெட்டியில் ரூ.3 லட்சம் அபேஸ்

புழல்: புழல் காவாங்கரை மகாவீர் கார்டன் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தனபால் (55). இவர், பிரபல கூல்டிரிங்ஸ் டீலராகவும், ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகவும் வேலை செய்து வருகிறார். நேற்று மாலையில் செங்குன்றத்தில் உள்ள தனியார் வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூபாய் 2 லட்சத்து 98 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்தார். கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் வைத்த பணத்தை பார்த்தபோது பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ பின்தொடர்ந்து வந்த ஆசாமிகள், உள்ளே இருந்த ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்தை எடுத்துவிட்டு தப்பி உள்ளனர். இதுகுறித்து, புழல் காவல்நிலையத்தில் தனபால் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்