Wednesday, July 3, 2024
Home » பைக் தீப்பிடித்து வியாபாரி கருகி சாவு

பைக் தீப்பிடித்து வியாபாரி கருகி சாவு

by kannappan

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பைக் தீப்பிடித்து நெல் வியாபாரி உடல் கருகி இறந்தார். இது வழிப்பறி கும்பலின் சதிவேலையா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ள நிலையில் சந்தேக மரணம் பிரிவில் வழக்குபதிந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.]புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால்(65). நெல் வியாபரியான இவருக்கு ஆண்டாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்றிரவு தவளகுப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள சமாதி பஸ் நிறுத்தம் அருகே வேணுகோபால் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பதற்றமடைந்த வேணுகோபால் பைக்கை நிறுத்த முயன்றபோது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது பைக் விழுந்து தீப்பற்றிக் கொண்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பைக்கும் முற்றிலும் எரிந்து நாசமானது.அவ்வழியாக சென்றவர்கள் இதுபற்றி போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். உடனே தவளகுப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் கருகிய நிலையில் கிடந்த வேணுகோபாலின் உடலை மீட்ட போலீசார், கதிர்காமத்துக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே சம்பவம் நடந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் வேணுகோபாலை மடக்கி வழிப்பறி கும்பல் கொலை செய்தார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இறந்த வேணுகோபாலின் உடல் இன்று மதியம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது….

You may also like

Leave a Comment

18 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi