பைக்குகள் மோதியதில் வாலிபர் பலி

 

மாமல்லபுரம், டிச.12: மாமல்லபுரம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் மகன் மணிராஜ் (30). இவர், நேற்று முன்தினம் இரவு திருக்கழுக்குன்றத்தில் இருந்து பைக்கில், மாமல்லபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, பெருமாளேரி அருகே வந்த போது, எதிரில் மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வலது கால் முறிவு ஏற்பட்டு, பலத்த காயமடைந்த மணிராஜை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த மணிராஜ் சிகிச்சை பலனின்றி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை