பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் பலி: கம்பெனி ஊழியர் படுகாயம்

ஆவடி: ஆவடியை அடுத்த திருநின்றவூர் மேம்பாலத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், காங்கிரஸ் பிரமுகர் பரிதாபமாக இறந்தார். மேலும், படுகாயமடைந்த தனியார் கம்பெனி ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆவடி அடுத்த திருநின்றவூர், சுதேசி நகர், சிந்து தெருவை சேர்ந்தவர் பிரபு (41). இவர், திருநின்றவூர் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரபு வீட்டிலிருந்து பைக்கில் திருநின்றவூர் பஜாருக்கு புறப்பட்டார். இவர், திருநின்றவூர் மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். மேலும், திருநின்றவூர், பெரிய காலனி, மேட்டு தெருவைச் சார்ந்த தனியார் கம்பெனி ஊழியர் அறிவழகன் (22) என்பவர் பைக்கில் எதிரே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 2 பைக்குகளும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் முதலில் பிரபுவை மீட்டு திருநின்றவூர் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபு வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். படுகாயமடைந்த அறிவழகன் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு தனியார் மருத்துவமனையில் இருந்து பிரபு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!