பைக்கில் இருந்து தவறி விழுந்து வங்கி உதவி மேலாளர் பலி

 

கடலூர், ஆக. 5: கடலூர் உண்ணாமலை செட்டி சாவடியை சேர்ந்தவர் சேகர் மகன் கிருபாகரன்(30). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று கடலூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு