Sunday, October 6, 2024
Home » பைக்கில் அழைத்துச்சென்றுகூலி தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது

பைக்கில் அழைத்துச்சென்று
கூலி தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது

by Karthik Yash

நெல்லை,ஏப்.12: தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் இசக்கி (30). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த தங்ககுமார் (22) என்பவர், சாலையில் நடந்துசென்ற இசக்கியை, லிப்ட் கொடுப்பதாகக் கூறி தனது பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்றார். அருகேயுள்ள மறைவான பகுதிக்கு சென்றதும் தங்ககுமார் பைக்கில் இருந்து இசக்கியை இறக்கிவிட்டதோடு கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டப்பையில் இருந்த 210 ரூபாயை பறித்துச்சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இசக்கி, பின்னர் இதுகுறித்து பாளை ஐகிரவுண்ட் மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தங்ககுமாரை போலீசார் கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi