Friday, July 5, 2024
Home » பேர்ஸ்டோ அபார சதம்: ‘பாலோ ஆன்’ நெருக்கடியை தவிர்த்தது இங்கிலாந்து

பேர்ஸ்டோ அபார சதம்: ‘பாலோ ஆன்’ நெருக்கடியை தவிர்த்தது இங்கிலாந்து

by kannappan

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து போராடி வருகிறது. சிட்னி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (134 ஓவர்). அடுத்து  முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்திருந்தது. ஹசீப், கிராவ்லி இருவரும் தலா 2 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஆஸி. வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஹசீப்  6, கிராவ்லி 18, கேப்டன் ஜோ ரூட் 0, மலான் 3 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து  21.5 ஓவரில் 36 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஜானி பேர்ஸ்டோ – பென் ஸ்டோக்ஸ்  இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இருவரும் அடுத்தடுத்து அரை சதம் விளாசியதுடன் 5வது விக்கெட்டுக்கு 128 ரன் சேர்த்தனர். ஸ்டோக்ஸ் 66 ரன் (91 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி       லயன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த  ஜோஸ் பட்லர்  ‘டக் அவுட்டாகி’ ஏமாற்றமளித்தார். ஒரு முனையில் பேர்ஸ்டோ பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அதிரடியில் இறங்கிய மார்க் வுட் ‘பாலோ ஆன்’ நெருக்கடியை தவிர்க்க உதவினார். அவர் 41 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் லயன் வசம் பிடிபட்டார். இங்கிலாந்து தரப்பில்  இந்த தொடரின் முதல் சதத்தை   பேர்ஸ்டோ பதிவு செய்து அசத்தினார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்தது (70 ஓவர்).  பேர்ஸ்டோ 103 ரன், ஜாக் லீச் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. தரப்பில்  கேப்டன் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட் எடுத்தனர். கைவசம் 3 விக்கெட் இருக்க, 158 ரன் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து இன்று 4வது நாள் சவாலை சந்திக்கிறது….

You may also like

Leave a Comment

8 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi