பேரூராட்சி மன்ற கூட்டம்

காரிமங்கலம், அக்.2: காரிமங்கலம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணை சேர்மன் சீனிவாசன், செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் ரவி வரவு- செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் பெற்றார். தொடர்ந்து துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்த தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சதீஷ்குமார், சுரேந்திரன், மாதப்பன், சிவக்குமார், நாகம்மாள், இந்திராணி ராமச்சந்திரன், கீதா முத்து செல்வம், பிரியா சங்கர் ராஜம்மாள், ராதா ராஜா கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை