Tuesday, September 17, 2024
Home » பேருந்து கட்டண உயர்வு பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம்

பேருந்து கட்டண உயர்வு பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம்

by kannappan

பெரம்பலூர்: தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் டீசல் விலை ஏற்றத்தால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பை சந்தித்து வரும் நிலையிலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையிலான பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்ற நிலைப்பாட்டையே தொடர வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் லாபத்துடன் கூடிய வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பேருந்துகளில் பின்புற பாகங்களில் விளம்பரம் செய்து வருவதுபோல், விரைவில் பேருந்துகளின் இரு பக்கங்களிலும் விளம்பரங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வரும் சரக்கு போக்குவரத்து (லக்கேஜ்) சேவையை அனைத்து அரசு பேருந்துகளிலும் விரிவுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்….

You may also like

Leave a Comment

8 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi