பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

சேலம், டிச.21: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் ஜாபர் சிக்கந்தர் (48). இவர் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள பாத்திரகடையில் பணியாற்றி வந்தார். நேற்று காலை அவர் தனியார் பஸ்சில் சேலம் வந்தார். சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தியேட்டர் அருகே நிற்பதற்கு முன்பாக பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த ஜாபர் சிக்கந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை