பேரிகை அருகே கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர், அக்.9: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார் மாஸ்தி சோதனைச்சாவடி அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு லாரியில் சோதனையிட்டதில், 35 டன் எடை கொண்ட பெரிய கிரானைட் கல் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கிரானைட் கல்லுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

கணவரின் உடலை மறு போஸ்ட்மார்டம் கோரிய மனு தள்ளுபடி

திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல இருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு