பேராசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

சேலம், ஆக.30: சேலம் அருகே டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அரசு கல்லூரி உதவி பேராசிரியையிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் கோட்டகவுண்டம்பட்டி குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுகன்யா(35). இவர் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை பணி முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பெரியார் பல்கலைக்கழகம் எதிரே புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, 2 பேர் டூவீலரில் வந்து திடீரென வண்டியை மறித்தனர்.அவர்கள் சுகன்யா அணிந்திருந்த 2 பவுன் டாலர் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா, கருப்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்