Tuesday, July 2, 2024
Home » பேச மறுத்த வாலிபருக்கு சரமாரி அடிஉதை நண்பர்கள் மூவர் கைது

பேச மறுத்த வாலிபருக்கு சரமாரி அடிஉதை நண்பர்கள் மூவர் கைது

by kannappan

பெரம்பூர்: ஏன் எங்களிடம் பேச மறுக்கிறாய் என்று வாலிபர் மீது தாக்குதல் நடத்திய நண்பர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை பெரவள்ளூர் கேசி.கார்டன் 5வது தெருவை சேர்ந்தவர் சதீஷ் என்கின்ற சக்தி (21). இவர் தனியார் ஆய்வகத்தில் பணியாற்றி வருகின்றார். நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு கேசி.கார்டன் 5வது தெரு வழியாக நடந்துச்சென்றார். அப்போது அவரது நண்பர்கள் 3 பேர் திடீரென வந்தனர். அவர்கள் சக்தியை மறித்து உன் நண்பர்களான எங்களுடன் ஏன் பேச மறுக்கிறாய் என்று கேட்டுள்ளனர். இதன்காரணமாக அவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மூவரும் சேர்ந்து சதீஷை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதன்பிறகு சதீஷை அப்பகுதியினர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சதீஷ் கொடுத்த புகாரின்படி, திருவிக.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து திருவிக.நகர் அன்பழகன் நகர் 3வது தெருவை சேர்ந்த கண்ணன் (19), பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த மோகன் (22), மணிகண்டன் (19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

You may also like

Leave a Comment

10 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi