பேச மறுத்த காதலி போட்டோவை சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவு

 

தஞ்சாவூர், ஆக. 24: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன்(27). இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.  சென்னையில் பணியாற்றிவரும் தஞ்சாவூரைச் சேர்ந்த 26 வயது நர்ஸ். இந்நிலையில் மணிவண்ணன், நர்ஸ் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இளம்பெண் மணிவண்ணனிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மணிவண்ணன் காதலிக்கும் போது, சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவில் நர்ஸ் காதலி போட்டோவை மட்டும் ஆபாசமாக சித்தரித்து, சமுக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மணிவண்ணன் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார், கடந்த 19ம் தேதி வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மணிவண்ணனை, இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான தனிப்படையினர், நேற்று முன்தினம் கர்நாடகாவில் கைது செய்தனர். மணிவண்ணனை நேற்று தஞ்சாவூர் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்