Thursday, July 4, 2024
Home » பேச மறுத்த காதலியை தாக்கிய வாலிபர் கைது

பேச மறுத்த காதலியை தாக்கிய வாலிபர் கைது

by Karthik Yash

சேலம், ஜன.10: சேலத்தில் பேச மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் காதலியை தாக்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் நவீன் (24). இவர் 18 வயதுடைய பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்தார். நவீனின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் அவரிடம் பேச மறுத்து விட்டார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி நவீனின் வீட்டின் அருகே அந்த பெண் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த நவீன், ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டுள்ளார். அப்போதும் அந்த பெண் பேச மறுத்து அங்கிருந்து செல்ல முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நவீன் அந்த பெண்ணை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீனை கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi