பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவாரூர், ஆக.22: திருவாரூரில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றுகளை கலெக்டர் சாரு வழங்கினார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. இதில்பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 215 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, டாக்டர் அம்பேத்கர் மற்றும் டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றுகளை கலெக்டர் சாரு வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் புவனா, தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கனகலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை