எட்டயபுரம் ஜூன் 4: பீக்கிலிப்பட்டி – கடலையூர் சாலையில் புதிய பாலம் கட்டுமான பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ பார்வையிட்டார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் பீக்கிலிப்பட்டியில் இருந்து கடலையூர் செல்லும் சாலையில் பாலம் கட்டுமான பணி துவங்கி நடந்து வருகிறது. இந்த பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ பார்வையிட்டார். மேலும் ஒப்பந்ததாரரிடம் பணியை தரமாகவும், மழை காலம் துவங்கும் முன்பு விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கேசவன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.